இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னர், அங்குள்ள பெண்கள், ஆண்களைவிட 14 சதவீதம் குறைவாகவே சம்பளம் பெற்றுவந்தனர். 2022-ம் ஆண்டுக்குள், பணியிடங்களில் பாலினப் பாகுபாடு முற்றிலும் ஒழிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்களைக்கொண்ட நிறுவனங்களில், 40 சதவீதம் இடஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தன்று, 'சரிசமமான உரிமை என்பது, மனித உரிமை. பணியிடங்களில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான வாய்ப்புகளைத் தருவது அவசியம். இந்த இலக்கை அடையும் முயற்சிகள் எடுப்பது நமது கடமை' என்று கூறி, இதற்கான மசோதாவை சட்டமாக உருவாகுவதற்கு ஒப்புதல் அளித்தார், ஐஸ்லாந்து நாட்டின் சமஉரிமை மற்றும் சமூக விவகாரத்துறை அமைச்சர், தோர்ஸ்டெய்ன் விங்லுண்ட்சன் (Thorsteinn Vinglundsson). ஏற்கெனவே, இந்த நாட்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட, பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் 49 சதவீதம் பெண்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை, பணியிடங்களில் ஒரே வேலையைச் செய்யும் ஆண்கள், பெண்களைவிட 27 சதவீதம் அதிக ஊதியம் பெறுகிறார்கள். சராசரியாக ஓர் ஆணுக்கு ஒரு மணி நேரத்தில் 288.68 ரூபாயும், ஒரு பெண்ணுக்கு 207.85 ரூபாயும் வழங்கப்படுகிறது என்கிறது ஓர் ஆய்வு. 2016-ம் ஆண்டு, பிரபல வேலைவாய்ப்பு இணையதளமான 'மொன்ஸ்டர் இந்தியா' நடத்திய ஆய்வில், இந்தப் பாலினப் பாகுபாடு, ஐ.டி துறையில் அதிகமாக உள்ளது என்கிறது. ஐ.டி துறையில் வேலை செய்யும் ஆண்கள், ஒரு மணி நேரத்துக்கு 360.9 ரூபாயும், பெண்கள் 239.6 ரூபாயும் சம்பளம் பெறுகிறார்கள். பெண்களுக்குக் கிட்டதட்ட 34 சதவீதம் குறைவான ஊதியம் அளிக்கப்படுகிறது என்கிறது இந்த ஆய்வு.
நிறுவனத்தில் பதவி உயர்வு அளிப்பதில், பெண்களைவிட ஆண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும், இந்தப் பாகுபாட்டு, பெண்களின் திருமணத்துக்குப் பிறகு உருவாகும் குடும்பப் பொறுப்புகளும், சில கலாசார கட்டுப்பாடுகளுமே காரணம் என்று தெரிவிக்கிறது. ஆனால், இத்தகைய காரணங்களையும் தாண்டி, தன் பொருளாதார தேவைக்காகப் பணிக்குச் செல்லும் எண்ணற்ற இந்தியப் பெண்களுக்குச் சரிசமமான ஊதியம் வழங்கச் செய்வது அரசின் கடமை.
No comments:
Post a Comment