ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், “ரொம்ப பில்ட் அப் கொடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். எனக்கு மீடியா பார்த்தால் தான் பயம். அரசியல் பார்த்தால் பயம் இல்லை. மற்றபடி நான் அரசியலுக்கு வருவது உறுதி. இதுகாலத்தின் கட்டாயம். வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன்” என்று பரபரப்பாக அறிவித்தார்.
ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழகத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் ரஜினியின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

ஒருபுறம் அரசியல்பிரவேச அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மறுபுறம் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 'என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என்று ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார
ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழகத்தில் பெரும் விவாதங்களை உருவாக்கி உள்ளது. நடிகர் கமல்ஹாசன் ரஜினியின் அறிவிப்பை வரவேற்றுள்ளார். பா.ஜ.க. தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனும் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

ஒருபுறம் அரசியல்பிரவேச அறிவிப்பு வெளியிட்ட நிலையில், மறுபுறம் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். 'என்னை வாழ்த்திய, என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என்று ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார
No comments:
Post a Comment